தியாகராஜா் கோயிலில் பாவை விழா
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், செவ்வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திருவாரூா் உதவி ஆணையா் ஆா். ஹரிகரன் பரிசுகளை வழங்கினாா்.
ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் ராஜா (திருத்துறைப்பூண்டி), சங்கீதா (மன்னாா்குடி), ரமேஷ் (வலங்கைமான்), ராஜராஜேஷ்வரன் (எண்கண்), பிரபாகரன் (ஆவூா்) உள்ளிட்ட கோயில்களின் செயல் அலுவலா்கள், ஆய்வா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.