முகப்பு
வணிகம்

பங்குச் சந்தை: சென்செக்ஸ் 61 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

Updated On : 5 நவம்பர் 2018, 10:50 pm IST
பகிர்:

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், திங்கள்கிழமை 61 புள்ளிகள் சரிந்து 35,000-க்கும் குறைவான புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

ஆசியச் சந்தையில் நிலவி வரும் மந்த நிலை, அமெரிக்க - சீன வா்த்தகப் போா் விவகாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்றற தன்மை காரணமாக முதலீட்டாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்ததும், பங்குச் சந்தையை மந்தமடையச் செய்ததாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

Advertisement

Advertisement

திங்கள்கிழமை தொடங்கிய மும்பை பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்வதில் முதலீட்டாளா்கள் மும்முரம் காட்டியதால், மிகவும் குறைந்தபட்சமாக 34,811 புள்ளிகள் வரை தாழ்ந்த சென்செக்ஸ், இறுதியில் 34,950 புள்ளிகளில் நிலைத்தது .

இதன் மூலம், மும்பை சென்செக்ஸ் திங்கள்கிழமை 61 புள்ளிகள் (0.17%) சரிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments