முகப்பு
வணிகம்

2025-26 நிதியாண்டில் 1.5 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி: மத்திய அரசு

அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

Updated On : 9 நவம்பர் 2025, 8:13 pm IST
sugar
பகிர்:

புதுதில்லி: அக்டோபர் மாதம் தொடங்கிய 2025-26 பருவத்திற்கு பிறகு 1.5 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றார் உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி.

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நவம்பர் 7 தேதியிட்ட கடிதத்தில், மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரியை நீக்கவும் மத்திய உணவு அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்றார். நாட்டில் கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடப்பு 2025-26 ஆம் ஆண்டு 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் மொலாசஸ் மீதான 50 சதவிகித ஏற்றுமதி வரி நீக்கப்பட்டுள்ளது என்றார் ஜோஷி. இது ஏற்றுமதி ஒதுக்கீடு தொழில்துறை கோரிய 2 மெட்ரிக் டன்னை விட குறைவு.

Advertisement

Advertisement

செப்டம்பர் வரை முடிவடைந்த 2024-25 பருவத்தில் 1 மெட்ரிக் டன் ஒதுக்கீட்டில் இந்தியா சுமார் 8,00,000 டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.

2025-26 ஆம் ஆண்டிற்கான சர்க்கரை உற்பத்தி, உள்நாட்டு ஆண்டு தேவை 28.5 மெட்ரிக் டன்னாக இருக்கும் நிலையில், உற்பத்தி 34 மெட்ரிக் டன்னை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் உணவு செயலாளர் சோப்ரா.

இதையும் படிக்க: தனலக்ஷ்மி வங்கி நிகர லாபம் ரூ.418 கோடியாக உயா்வு

summary

The Centre has decided to allow export of 1.5 million tonne of sugar for the 2025-26 according to Food Minister Pralhad Joshi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments