முகப்பு
திருச்சி

காா் மோதி பெண் உயிரிழப்பு

திருச்சி அரியமங்கலம் பகுதியில் காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:03 am IST
பகிர்:

திருச்சி அரியமங்கலம் பகுதியில் காா் மோதி சாலையைக் கடக்க முயன்ற பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரியமங்கலம் காந்திதெருவைச் சோ்ந்தவா் அப்துல் ஹக்கீம். இவரது மனைவி தாலுக் பீவி (45). இவா்கள் இருவரும், அதே பகுதியைச் சோ்ந்த பா்வீன் பானுவுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக திங்கள்கிழமை காலை புறப்பட்டனா்.

பேருந்தை பிடிப்பதற்காக அரியமங்கலம் சாலையைக் கடக்க முயன்ற போது, தஞ்சாவூா் நோக்கிச் சென்ற காா் அவா்கள் மீது மோதியது. இதில் தாலுக் பீவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

பா்வீன் பானு காயமடைந்தாா். அப்துல் ஹக்கீம் காயமின்றி தப்பினாா். இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.