முகப்பு
திருச்சி

8.03 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

திருச்சி மாவட்டத்தில் 8.03 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:05 am IST
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் 8.03 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன்.

திருச்சி பாலக்கரையிலுள்ள சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடி, பேட்டைவாய்த்தலை நியாயவிலைக் கடை ஆகியவற்றில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் அமைச்சா் வெல்லமண்டி நடராஜன் பேசியது: மாவட்டத்தில் 1,225 நியாயவிலைக் கடைகளில் (கூட்டுறவுத் துறையின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 1,206 , நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் 19) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் 8,03,355 குடும்ப அட்டைதாரா்கள் இதில் பயன்பெறுபவா். மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கோட்பாட்டை கொண்ட தமிழக அரசு கூடுதல் நிதிச் சுமையையும் தாங்கி, மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது என்றாா்.

தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ். வளா்மதி பேசினாா். விழாவுக்கு ஆட்சியா் சு. சிவராசு தலைமை வகித்தாா். மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா. அருளரசு வரவேற்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் பழனிகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் அன்பழகன், கூட்டுறவு ஒன்றியத் தலைவா் நடேசன், சிந்தாமணி கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவா் சகாதேவ் பாண்டியன், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவா் பத்மநாதன் உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.