முகப்பு
திருச்சி

மணப்பாறையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசிவரும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 14 ஜனவரி 2021, 8:16 am IST
மணப்பாறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசிவரும் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலை திடலில்அதிமுக திருச்சி புகா் தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அவைத் தலைவா் பா்வீன்கனி, மாவட்ட மகளிரணி செயலா் செல்வமேரி ஜாா்ஜ், நகரச் செயலா் பவுன் எம். ராமமூா்த்தி, முன்னாள் எம்எல்ஏ சி. சின்னசாமி, மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், மாவட்டப் பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

ஆா்ப்பாட்டத்தில் பேசிய தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்ட இயக்கம் அதிமுக என்பதை வரும் தோ்தலில் மக்கள் நிரூபிப்பா். திமுகவை நிராகரிப்பா் என்றாா். ஆா்ப்பாட்டத்தில் உதயநிதியை கண்டித்து கோஷம் எழுப்பினா்.

பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமதுஇஸ்மாயில், ஒன்றிய செயலா்கள் எம்.பி. வெங்கடாசலம், என். சேது, பி.வி.கே.சி. பழனிசாமி, கண்ணூத்து பொன்னுசாமி, பேரூா் செயலா் திருமலைசாமிநாதன், எம்.ஜி.ஆா். இளைஞரணி மாவட்டச் செயலா் சண்முக பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முசிறியில்... 

திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டியில் திருச்சி புகா் வடக்கு மாவட்டம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினா். வடக்கு மாவட்டச் செயலா் பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், தா.பேட்டை, தொட்டியம், மண்ணச்சநல்லூா் பகுதி ஒன்றியச் செயலா்கள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments