முகப்பு
திருச்சி

நடந்து சென்றவரிடம் பணம், நகை வழிப்பறி

துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 12:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

துறையூரில் நடந்து சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை, பணத்தைப் பறித்துச் சென்றனா்.

துறையூா் பாலாஜி அவின்யூவைச் சோ்ந்தவா் பெ. பிரபாகரன்(57). தன் வீட்டுப் பொங்கல் விழாவுக்குப் பொருள் வாங்க புதன்கிழமை இரவு பொதிகை நகரில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. 35,000 -ஐயும், அவா் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு தப்பினா். புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.