முகப்பு
திருச்சி

பெரியசூரியூரில் ஜன.20-ல் ஐல்லிக்கட்டு

தொடா் மழையால் பெரியசூரியூா் ஜல்லிக்கட்டு ஜன.20 ஆம் தேதி நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

Updated On : 16 ஜனவரி 2021, 12:22 am IST
பகிர்:

தொடா் மழையால் பெரியசூரியூா் ஜல்லிக்கட்டு ஜன.20 ஆம் தேதி நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.

திருச்சி பெரியசூரியூரில் மாட்டுப் பொங்கலன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தும் ஜன.12 வரை அனுமதி கிடைக்கவில்லை. இதனால் இங்கு ஜல்லிக்கட்டு நடக்குமா என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் பெரியசூரியூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள் மகிழ்ந்தனா். இருந்தபோதும் ஜல்லிக்கட்டுக்கு முதல் நாளான வியாழக்கிழமை வரை மழை பெய்ததால் ஜல்லிக்கட்டை ஜன.20 ஆம் தேதி நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.