முகப்பு
வெள்ளிமணி

கங்கை வழிபட்ட நாதர்!

மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது

Updated On : 21 மார்ச் 2013, 6:02 pm IST
பகிர்:

மயிலாடுதுறையில் காவிரியின் வடக்கே அமைந்துள்ளது விஸ்வநாதர் ஆலயம். சுமார் 2000 ஆண்டுகள் பழைமையானது இக்கோயில்.சப்த ரிஷிகள் என்று அழைக்கப்படும் ஏழு மகரிஷிகளில் முதன்மையானவர் கன்வமகரிஷி.

"மக்கள் அனைவரும் காசியில், கங்கை நதியான என்னில் நீராடி பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். அந்தப் பாவங்கள் என் மீது அமர்ந்துவிடுகின்றன. அவை தீர என்ன வழி?'' என்று கன்வமகரிஷியிடம் வருந்தினாள் கங்கை. அவளிடம் துலா மாதமாகிய ஐப்பசி மாதத்தில் மாயூரம் சென்று காவிரியில் நீராடினால் உன் பாவம் தீரும் என்றார் கன்வமகரிஷி. அதன்படி மயிலாடுதுறை வந்து காவிரியில் நீராடினாள் கங்கை. காசியில் இருந்து கன்வரிஷி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த விஸ்வநாதரையும் வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றாள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இக்கோயிலில் வேறு எங்கும் காணமுடியாத ஸ்ரீநடராஜர் ரகசிய யந்திரம் பெரிய அளவில் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் விசாலாட்சியை வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

Advertisement

Advertisement

தகவலுக்கு: 94430 71764.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.