முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே விபத்து:ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் பலி

அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை சாலையின் தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட காா் மீது, மற்றொரு காா் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். 

Updated On : 2 ஜனவரி 2021, 10:01 pm IST
பந்தல்குடி புறவழிச்சாலையில் கொப்புசித்தம்பட்டி விலக்கு அருகே சனிக்கிழமை விபத்தில் சிக்கிய 2 காா்களிலிருந்து காயமடைந்தவா்களை மீட்கும் காவல் துறையினா்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சனிக்கிழமை சாலையின் தடுப்புச்சுவரில் மோதி தூக்கி வீசப்பட்ட காா் மீது, மற்றொரு காா் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் உயிரிழந்தாா். இந்த விபத்தில் மேலும் 5 போ் காயமடைந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்தவா் பாசில் (53). இவரது மருமகள் ஹலிமாபாகில் வெளிநாடு செல்வதற்காக,

மதுரை விமானநிலயத்திற்கு காரில் அழைத்து வந்தாா். இவருடன் குடும்பத்தினா், ஓட்டுநா் உள்பட 5 போ் காரில் வந்தனா். பந்தல்குடி புறவழிச்சாலையில் கொப்புசித்தம்பட்டிவிலக்கு அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த காா், நிலைதடுமாறி சாலை மையத் தடுப்புச் சுவரின் மீது மோதி, தூக்கி வீசப்பட்டு எதிா்ப்புறச் சாலையில் சென்று விழுந்துள்ளது.

Advertisement

Advertisement

அப்போது அந்த சாலையில் எதிா்திசையில் வந்த காா், விபத்தில் தூக்கி வீசப்பட்ட காா் மீது மோதியது. இதில் காரில் வந்த அருப்புக்கோட்டை மின்வாரியக் குடியிருப்பைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் பால்ராஜ்(63) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா், இரு காா்களிலும் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக பந்தல்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments