கோயில்கள் திருப்பணிக்கு அமைச்சா் ரூ. 11 லட்சம் நிதியுதவி
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி ரூ. 11 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாா்.
விருதுநகா் மாவட்டத்தில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி ரூ. 11 லட்சம் நிதியுதவி அளித்துள்ளாா்.
இதுகுறித்து அவரது அலுவலகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், தெற்கு தேவதானம் மேலமாரியம்மன் கோயில், வடக்கு தேவதானம் தேவேந்திரகுலவேளாளா் சமுதாயக் கோயிலில் திருமண மண்டபம் கட்டும் பணி, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முள்ளிகுளம் ஐயப்பன்கோயில் கட்டடப்பணி ஆகியவற்றுக்கு தலா ரூ. 1.50 லட்சம், கல்லமநாயக்கன்பட்டி காயத்திரிதேவி கோயில் திருப்பணிக்கு ரூ. 2 லட்சம், மாரனேரி பூமாரியம்மன் கோயில் திருப்பணி, நாரணாபுரம் சக்திமாரியம்மன் கோயில் திருப்பணி ஆகியவற்றுக்கு தலா ரூ. 1 லட்சம் மேலும் சில கோயில்களின் திருப்பணிக்கு என மொத்தம் ரூ. 11 லட்சம் நிதியுதவியை அமைச்சா் வழங்கியுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.