முகப்பு
தினமணி கதிர்

டூத் பேஸ்ட் தீர்ந்துவிட்டால்!

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

Updated On : 22 ஆகஸ்ட், 2015 at 7:21 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:00 PM

தீர்ந்துவிட்ட டூத் பேஸ்ட் டியூப்பை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்து, பிறகு பிதுக்கினால் வேஸ்ட் இல்லாமல் முழுவதும் பிரஷ்சில் வந்துவிடும்.

இட்லி மாவு புளிக்காமல் இருக்க இரண்டு வெற்றிலையைக் காம்பு கிள்ளாமல் மாவில் குப்புறப் போட வேண்டும். இப்படி செய்தால் மாவு பொங்காது. புளிக்காது.

மாவு புளித்துவிட்டால் அதில் கடுகு பெருங்காயத்தைத் தாளித்துப்போட்டு, மல்லி, கறிவேப்பிலை, ஒரு தேக்கரண்டி ஜீனி, சிறிது உப்பு சேர்த்து, வெது வெதுப்பான வெந்நீரில் ரவா, மைதா கொஞ்சம் சேருங்கள். இதனுடன் வெங்காயம், மிளகாய் சேர்த்து தோசை வார்த்தால் புளிப்பு இருக்காது.

Advertisement

ரவா, மைதா, அரிசி இவற்றில் கொஞ்சம் வசம்பு தட்டி அந்தப் பாத்திரத்தில் போட்டு விட்டால் போதும். பூச்சி புழுக்கள் வராது.

ஸ்டோர் ரூம், பாத்ரூம் என ஆங்காங்கே ஆஸ்ப்ரின் மாத்திரைகளைப் போட்டு விட்டால் கரப்பான் தொல்லை இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.