முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

நல்ல களம் தேவை

ஹரிதாஸ்', 'சலீம்', 'ஒரு பக்க கதை', 'வேலைக்காரன்', 'கன்னிராசி', 'முப்பரிமாணம்' என நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஈர்க்கிறார் நடிகர் பி.வி.சந்திரமௌலி.

Updated On : 8 மார்ச் 2026, 4:17 am IST
பகிர்:

'ஹரிதாஸ்', 'சலீம்', 'ஒரு பக்க கதை', 'வேலைக்காரன்', 'கன்னிராசி', 'முப்பரிமாணம்' என நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் ஈர்க்கிறார் நடிகர் பி.வி.சந்திரமௌலி. தொடர்ச்சியாக எதார்த்த களங்கள் கொண்ட கதை கிடைத்தால் இன்னும் நல்ல இடங்களுக்குப் பயணப்படுவேன் என்கிறார்.

அவரிடம் பேசும்போது, 'சினிமாவுக்கு முன்னே பின்னே சம்பந்தம் இல்லாத குடும்பம். ஆரம்ப காலத்தில் தமிழகக் காவல் துறையில் வேலை. அது என் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. பின்னர் தொழில்ரீதியாக கவனம் செலுத்தினேன். அப்போதுதான் 'ஹரிதாஸ்' படத்துக்காக இயக்குநர் ஜி.என். ஆர். குமாரவேலன் என்னை அணுகினார். போலீஸ் கதை என்பதால் சில தரவுகளைக் கேட்டார். பின்னர் நடிக்கும் வாய்ப்பையும் கொடுத்தார்.

இந்தப் படம் என் நடிப்பு பயணத் தொடக்கத்துக்குப் பெரும் பலம். சினிமாவின் மேல் வெறும் ஆசையை மட்டும் கொள்ளாமல், அதைப் பற்றி தீவிரமாக தெரிந்து கொண்டேன். ஆனால், சினிமா வாசலுக்கான திறவுகோல் எங்கேயும் இல்லை. பின்னர் விஜய் ஆண்டனி 'சலீம்' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். அது பரவலாகப் பேசப்பட்டது.

Advertisement

Advertisement

இப்போது எல்லாவற்றுக்கும் தயாராக இருக்கிறேன். உழைப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை. துக்கம், கவலை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், அன்பு, அழுகை இவையெல்லாம் நிறைய இருக்கிறது. நான் பார்த்து பழகின மனிதர்கள் எல்லாரும் அவ்வளவு நல்லவர்கள். நல்ல நல்ல அனுபவங்கள் கொடுத்தார்கள்.

இவற்றையெல்லாம் விட போராடி வெற்றிபெறத் துடிக்கும் உதவி இயக்குநர்கள், நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப் படைப்பாளிகள் எல்லோருக்கும் என் இடம் பிடிக்கும். அந்தளவுக்கு வருவேன். இப்போது தெரிகிற வெளிச்சம் எல்லாம் அற்புதம். இதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன். தேடி வந்தவை நிறைய... நானும் தேடிப் போகிறேன்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments