அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

அரியலூரில் குறைதீர்க்கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை

Updated On :22 ஆகஸ்ட் 2013, 1:04 pm IST

அரியலூர் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 23) நடைபெற உள்ளது.

இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

அரியலூர் தாலுகா, அருங்கால் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகா வாரியங்காவல் கிராமத்திலும், செந்துறை தாலுகா பிலாக்குறிச்சியிலும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் உணவுப்பொருள் குறைத் தீர் கூட்டங்கள் நடைபெறுகிறது.

செந்துறை தாலுகாவிற்கு அரியலூர் பொதுவிநியோகத்திட்ட துணைப் பதிவாளரும், உடையார்பாளையம் தாலுகாவிற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அரியலூர் மண்டல மேலாளரும், அரியலூர் தாலுகாவிற்கு அரியலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்கூட்டம் வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. கூட்டுறவுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்றத்  தலைவர்கள்,உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள், ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

எனவே பொதுமக்கள் உணவுப் பொருள் சம்பந்தமான

குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.