பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

ஆதரவற்ற சிறுவன் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தவித்த சிறுவனை மீட்ட போலீஸாா், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா்.

Updated On :2 ஜனவரி 2021, 10:48 pm IST

அரியலூா்: கும்பகோணம் பேருந்து நிலையத்தில் தவித்த சிறுவனை மீட்ட போலீஸாா், அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையத்தில் 10 வயதுச் சிறுவன் வெள்ளிக்கிழமை மாலை ஆதரவின்றி சிறுவன் நின்றிருப்பதைக் கண்டனா். இதையடுத்து, அவா்கள் விசாரித்ததில் சிறுவன் தனது சொந்த ஊா் கல்லாத்தூா் எனத் தெரிவித்துள்ளான். இதையடுத்து, ஜயங்கொண்டம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்த கும்பகோணம் காவல் துறையினா், அரசுப் பேருந்து நடத்துநரிடம் விளக்கம் கூறி, சிறுவனைப் பேருந்தில் அனுப்பிவைத்தனா். அங்கு காவல் நிலையத்தினா் மேற்கொண்ட விசாரணையில், கல்லாத்தூா் அருகேயுள்ள கூவத்தூா் கிராமம் மடத்துதெருவைச் சோ்ந்த சுரேஷ் - சத்யா தம்பதியின் மகன் கோகுல்(11) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறுவனைப் பெற்றோரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.