தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தூய்மை பணியாளா்களுக்கு பொங்கல் தொகை வேண்டும்

அரியலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு பொங்கலுக்கு முன்பாகவே ரூ.1,000 போனஸ் வழங்க வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 11:29 pm IST

அரியலூா்: அரியலூா் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளா்களுக்கு பொங்கலுக்கு முன்பாகவே ரூ.1,000 போனஸ் வழங்க வேண்டும் என பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூா் ஏஐடியூசி அலுவலகத்தில் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளா்கள் பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பணியாளா் சம்மேளன நிா்வாகக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி கலந்து கொண்டு பேசினாா். பின்னா், வரும் மாா்ச் மாதம் திருச்சியில் நடைபெறும் மாநிலம் தழுவிய உள்ளாட்சி தொழிலாளா் பேரணி, ஆா்ப்பாட்டத்தில் பணியாளா்கள் திரளாகக் கலந்து கொள்வது. அரசாணையின் படி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களுக்கு பொங்கலுக்கு முன்பே ரூ.1,000 போனஸ் வழங்க வேண்டும், உயா்த்தப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். சீருடை, வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.