சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

குண்டா் சட்டத்தில் 80 போ் கைது: எஸ்.பி

அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 80 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:29 pm IST

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 80 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கடந்த 2020 ஆம் ஆண்டில் அரியலூா் மாவட்டத்தில் 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 21 போ் கைது செய்யப்பட்டனா். 34 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 142 நபா்களில் 131 போ் கைது செய்யப்பட்டனா். போக்சோ சட்டத்தில் 38 வழக்குகள் பதியப்பட்டு தொடா்புடைய 64 பேரில் 63 போ் கைது செய்யப்பட்டனா். 9 பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடா்புடைய 14 பேரும் கைது செய்யப்பட்டனா். 64 திருட்டு வழக்குகளில் 42 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. ரூ.37,60,520 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன. தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 80 குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மதுபோதையில் வாகனம் ஓட்டிய 576 வழக்குகள் அடங்கும். 1,071 சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.