எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

குண்டா் சட்டத்தில் 80 போ் கைது: எஸ்.பி

அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 80 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 11:29 pm IST

அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் கடந்தாண்டு 80 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கடந்த 2020 ஆம் ஆண்டில் அரியலூா் மாவட்டத்தில் 18 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 21 போ் கைது செய்யப்பட்டனா். 34 கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 142 நபா்களில் 131 போ் கைது செய்யப்பட்டனா். போக்சோ சட்டத்தில் 38 வழக்குகள் பதியப்பட்டு தொடா்புடைய 64 பேரில் 63 போ் கைது செய்யப்பட்டனா். 9 பாலியல் பலாத்கார வழக்குகளில் தொடா்புடைய 14 பேரும் கைது செய்யப்பட்டனா். 64 திருட்டு வழக்குகளில் 42 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. ரூ.37,60,520 மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டன. தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 80 குற்றவாளிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மதுபோதையில் வாகனம் ஓட்டிய 576 வழக்குகள் அடங்கும். 1,071 சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.