சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

முருகனின் ஆறாவது படைவீடு! பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!

முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான பழமுதிர்சோலையில் இன்று காலை வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது.

News image

பழமுதிர்சோலையில் குடமுழுக்கு - யூடியூப்

Updated On :5 ஜூலை 2026, 8:31 am IST

மதுரை அழகர் கோவில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.

மதுரை திருமாலிருஞ்சோலை அழகர் கோயில் மலையில் முருகப்பெருமானின் பழமுதிர்சோலை அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் அருள்பாலிக்கும் ஒரே தலம் பழமுதிர்சோலை மட்டுமே.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த கடந்த சில மாதங்களாக தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதனிடையே, ஜூலை 1 ஆம் தேதியில் மஹா கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள், கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று (ஆனி 21) காலை 6 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று தீபாராதனைகள் நடைபெற்றன.

சிவாச்சார்யார்கள் மந்திரங்கள் ஓத ராஜகோபுரங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தீபாராதனைகள் காட்டப்பட்டன. கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

ட்ரோன்கள் மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன. கும்பாபிஷேக விழாவுக்காக எல்இடி திரைகள், குடிநீர், மருத்துவம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகள் அறநிலையத்துறையின் சார்பி்ல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள், 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

மேலும், இந்த விழாவில் அமைச்சர் நிர்மல் குமாரும் கலந்து கொண்டார்.

Summary

The Maha Kumbabishekam of the renowned Pazhamudircholai Solaimalai Murugan Temple, is being held today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.