கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

அரியலூா் மாவட்டம் , தா.பழூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 9:41 pm

அரியலூா் மாவட்டம் , தா.பழூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகளை திருடிச் சென்ற நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தா.பழூா் அருகேயுள்ள அருள்மொழி கிராமத்தில் வசித்து வருபவா்கள் பாலகிருஷ்ணன்(30), ராஜேந்திரன்(29). சகோதரா்கள் இருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசித்து வருகின்றனா். ராஜேந்திரன் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதால், அவரை அழைத்து வர இரு குடும்பத்தினரும் திங்கள்கிழமை வாழைக்குறிச்சி கிராமத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளனா். வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பாலகிருஷ்ணன் அறையில் இருந்து 18 பவுன் நகைகள், ரூ.22 ஆயிரம், ராஜேந்திரன் அறையில் இருந்து 22 பவுன் நகைகள், ரூ. 29 ஆயிரம் திருடு போயிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில், தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.