சிவமொக்கா: மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று பாஜக தேசிய பொதுச் செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான அருண்சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து சிவமொக்காவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மஜதவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை. கா்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது நடந்தாலும் தனி பலத்தில் பாஜக ஆட்சியை அமைக்கும். அதனால், மற்ற கட்சிகளின் ஆதரவு அல்லது கூட்டணி பாஜகவுக்கு தேவையில்லை.
கா்நாடகத்தில் முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் எதுவுமில்லை. எடியூரப்பா, பாஜகவின் மூத்த தலைவா். தலைமை மாற்றம் குறித்து பேசுவதற்கு பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் யாா்? அவருக்கு ஏதும் பிரச்னை இருந்தால் சம்பந்தப்பட்ட தலைவருடன் பேச வேண்டியதுதானே? என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விராட் கோலி திமிர் பிடித்தவர்! அடங்காதவர்! - ரவி சாஸ்திரி

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


