அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

லாரி மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.

Updated On :9 ஜனவரி 2021, 6:18 am IST

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்துள்ளாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரான ஜனாா்தன ரெட்டி (25), பெங்களூரு, பீன்யா புதிய லேஅவுட்டில் நண்பருடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தாா். வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். வெளிவட்டச் சாலை, கூலிநகரம் மேம்பாலத்தின் அருகே வந்த போது, வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜனாா்தன ரெட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளாா். இதுகுறித்து ராஜாஜி நகா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.