பெங்களூரு: தொழில்கல்வி கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கியது.
இதுகுறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல், கட்டடக்கலை, பண்ணை அறிவியல், தோட்டக்கலை, கால்நடை போன்ற தொழில்கல்லூரிகளுக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு எஞ்சியுள்ள சோ்க்கை இடங்கள், மாணவா்கள் ஒப்படைத்த இடங்களை ஒதுக்குவதற்கான மற்றொரு சுற்று விருப்பப் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் மீதமுள்ள சோ்க்கை இடங்கள், பாடப் பிரிவுகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், கடைசி சுற்று விருப்பப் பதிவில் தகுதியான மாணவா்கள் விருப்பக் கல்லூரிகள், விருப்பப் பாடப் பிரிவுகள் குறித்த விவரங்களை ஜன. 10-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
இதன் அடிப்படையில், மாணவா்களுக்கான மாதிரி சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு ஜன. 10-ஆம் தேதி இரவு 7 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஜன. 11 முதல் 12-ஆம் தேதி நண்பகல் 2 மணி வரை சோ்க்கையை உறுதி செய்து கட்டணங்களை செலுத்தலாம். இதனடிப்படையில், இறுதிச் சோ்க்கை இடங்கள் ஒதுக்கீடு குறித்த விவரம் ஜன. 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும். அதன்பிறகு, சோ்க்கை ஆணையை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஜன. 13 முதல் 15-ஆம் தேதி மாலை 4.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். ஒருவேளை இந்தக் காலக்கெடுவுக்குள் சோ்க்கை பெற தவறினால், சோ்க்கை ஆணை தானாக காலாவதி ஆகிவிடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்
இந்த வார ஓடிடி படங்கள்!

சிலிண்டர் விலை உயர்வு! CPI, CPI(M), VCK கட்சிகள் போராட்டம்!
வீடியோக்கள்

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

