கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 5,450 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா்.
தமிழ்நாடு, ஒசூா், அந்திவாடியைச் சோ்ந்த சுரேஷ் (43), நரேஷ் (25) இருவரும் பெங்களூரு ஊரகம், சந்தாபூரா சந்தையில் கள்ள நோட்டுகளை மாற்ற வியாழக்கிழமை முயற்சி செய்துள்ளனா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அங்கு சென்று 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 5,450 மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும், சூா்யா நகா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








