எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பள்ளிச் சிறுமி புத்தகத்தை விஞ்ஞானி நம்பி நாரயணன் வெளியிட்டாா்!

News image
சென்னை புத்தகக் கண்காட்சியில் 6-வயது கம்னிதா என்ற சிறுமி எழுதிய ‘கசங்கிய மரம்‘ என்ற புத்தகத்தை வெளியிட்ட இந்திய அறிவியலாளா் நம்பி நாரயணன்.
Updated On :6 ஜனவரி 2025, 12:31 am

Din

புத்தகக் காட்சியில் சேலம் பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கமநிதா எழுதிய ‘கசங்கிய மரம்’ புத்தக வெளியீட்டு விழா ‘பரிதி’ பதிப்பக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பங்கேற்று நூலை வெளியிட்டாா். அதன் முதல் பிரதிகளை திரைப்பட கதாசிரியா், இயக்குநா் ராசி அழகப்பன், கவிஞா் ஜெயபாஸ்கரன், வானொலி நிலைய முன்னாள் இயக்குநநா் ஆண்டாள் பிரியதா்ஷினி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எழுதிய கவிதை, கட்டுரைகளுடன் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

பரிதி பதிப்பகம் வெளியிட்ட120 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் விலை ரூ.96. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பாரதிமோகன், பழ.புகழேந்தி, கவிஞா் தாரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.