பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பட்ஜெட் எதிர்பார்ப்பு! ரூ.2 லட்சத்துக்கும் மேல் தங்கம் வாங்க பான் அவசியம்! விதி திருத்தப்படுமா?

பட்ஜெட் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக ரூ.2 லட்சத்துக்கும் மேல் தங்கம் வாங்க பான் அவசியம் என்ற விதிமுறை திருத்தப்படுமா என்பதும் ஒன்றாக உள்ளது.

News image
தங்கம் வாங்க- கோப்புப்படம்
Updated On :30 ஜனவரி 2026, 9:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

பட்ஜெட் எதிர்பார்ப்புகளில் ஒன்றாக ரூ.2 லட்சத்துக்கும் மேல் தங்கம் வாங்க பான் அவசியம் என்ற விதிமுறை திருத்தப்படுமா என்பதும் ஒன்றாக உள்ளது.

பிப். 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் மத்திய பட்ஜெட், மாதச் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியதாரர்கள், தங்கம் வாங்க நினைத்திருப்பவர்கள் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேவேளையில், பொருளாதார நிபுணர்கள், மத்திய பட்ஜெட்டில் வரும் அறிவிப்புகளை அறிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, தற்போது தங்கம் வாங்கும்போது அதில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, நகைக் கடைகளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வழங்கும்போது, வாங்குபவரின் ஆதார் எண் இணைக்கப்பட்ட பான் அட்டையை வழங்க வேண்டும் என்பது விதிமுறை.

ஆனால், இந்த விதிமுறை கடந்த 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அப்போது ரூ.2 லட்சத்துக்கு பல சவரன் தங்க நகைகள் வாங்கலாம். ஆனால், இப்போது ஒரு சவரன் நகைதான் வாங்க முடியும்.

எனவே, ஒன்றரை சவரன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட, ஏழை எளிய மக்கள் பான் கார்டு கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாதாரண சிறிய கடைகளில், குறைந்தபட்ச நகை வாங்குவோருக்கும் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனை நீக்க, பான் கார்டு கொடுக்கும் உச்ச வரம்பு தொகையை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தியிருக்கிறார்.

அந்த தொகை ஏழைகளுக்கு எட்டாத தொகையாக மாற்றப்பட்டால்தான், சிறு வணிகர்களும் நிம்மதியாக வியாபாரம் செய்ய வேண்டும். ஏழை எளிய மக்களும் குறைந்தது ஒரு சவரன் தங்க நகையையாவது எந்த தொல்லையும் இன்றி வாங்க முடியும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

summary

One of the budget expectations is whether the rule requiring a PAN to purchase gold worth more than Rs. 2 lakh will be amended.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.