சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் ஹாங்காங்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சிமெண்ட் ஆலைகளுக்குத் தேவையான கருவிகள், இயந்திரங்களைத் தயாரித்து அளிப்பதில் எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் முன்னணியில் உள்ளது. இலங்கை, வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்நிறுவனம் கருவிகளைத் தயாரித்து அளிக்கிறது. சர்வதேச அளவில் பிரபலமாக விளங்கும் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இப்போது ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் வியாழக்கிழமை கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி ரூ. 130 கோடிக்கு 68 சதவீத எல்என்வி டெக்னாலஜி நிறுவன பங்குகளை சினோமா நிறுவனம் வாங்கியுள்ளது. எல்என்வி டெக்னாலஜி நிறுவனத்துக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை சினோமா நிறுவனம் அளிக்கும். இதற்கான ஒப்பந்தத்தில் சினோமா இண்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் வாங் வெய் மற்றும் எல்என்வி டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி.சி. ராவ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
எல்என்வி டெக்னாலஜி நிறுவனம் இதுவரை 230 சிமெண்ட் ஆலைகளுக்கு கருவிகளைத் தயாரித்து அளித்துள்ளது. சினோமா நிறுவனம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகளை சர்வதேச அளவில் நிறுவியுள்ளது. எதிர்காலத்தில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து புதிய ஆலைகளுக்கான தொழில்நுட்ப உத்திகளைப் பகிர்ந்து கொண்டு நிறைவேற்றும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் முறைகேடு! உச்ச நீதிமன்றத்தில் மனு!

ஆனி மாதப் பலன்கள்: 12 ராசிக்காரர்களுக்கும்! எந்தெந்த ராசிக்கு பணவரவு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


