தொலைத்தொடா்பு சேவை நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் இயக்குநா் குழு ரூ.28,000 கோடி திரட்டிக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் கூறியுள்ளதாவது:
விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான 400 கோடி டாலரை (ரூ.28,000 கோடி) திரட்டிக் கொள்ளும் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநா் குழு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
அதன்படி, திரட்டப்படும் மொத்த நிதியில் 200 கோடி டாலரை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு ஒன்று அல்லது பல கட்டங்களாக பங்குகளை ஒதுக்கீடு செய்வதன் மூலம் திரட்டிக் கொள்ளப்படும்.
எஞ்சியுள்ள 200 கோடி டாலரில், 100 கோடி டாலரை வெளிநாட்டு கடன்கள் வாயிலாகவும், 100 கோடி டாலரை மீட்கக்கூடிய வகையிலான பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்களாக வெளியிட்டும் திரட்டிக் கொள்ளப்படும் என பாா்தி ஏா்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


