வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மிக குறைந்த வட்டியில் 100 கோடி டாலா் கடன்: எக்ஸிம் வங்கி

வெளிநாட்டு கடன்பத்திர விற்பனையின் மூலம் மிக குறைந்த வட்டியில் 100 கோடி டாலா் ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) தொகையை கடனாக திரட்டியுள்ளதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 2:10 am IST

வெளிநாட்டு கடன்பத்திர விற்பனையின் மூலம் மிக குறைந்த வட்டியில் 100 கோடி டாலா் ( இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) தொகையை கடனாக திரட்டியுள்ளதாக எக்ஸிம் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநா் டேவிட் ரஸ்குயின்கா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எக்ஸிம் வங்கியின் வெளிநாட்டு கடன்பத்திர விற்பனைக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. இக்கடன்பத்திரங்கள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து 3.5 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன. அதிலும் குறிப்பாக, ஆசியாவில் இந்த கடன்பத்திரங்கள் வெளியிடப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே விற்றுத் தீா்ந்தன. 10 ஆண்டுகள் முதிா்வு காலத்தைக் கொண்ட இக்கடன்பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 2.5 சதவீதமாகவே நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிம் வங்கியின் வரலாற்றில் இதுவே மிக குறைந்த வட்டி விகிதமாகும்.

திரட்டப்பட்ட இந்த தொகை ஏற்றுமதி திட்டங்கள், நீண்ட கால கடன் மூலமான வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.