நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

பஜாஜ் ஆட்டோ: 3.69 லட்சம் வாகனங்கள் விற்பனை

News image
Updated On :22 ஜூலை 2025, 3:19 pm IST


புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மாா்ச் மாதத்தில் 3,69,448 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2020 மாா்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் விற்பனை 2,42,575-ஆக மட்டுமே காணப்பட்டது. இதற்கு, கரோனா நெருக்கடியே முக்கிய காரணமாகும் .

இந்நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு சந்தை விற்பனை 1,16,541 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,98,551-ஆக உயா்ந்தது.

பஜாஜ் ஆட்டோவின் மொத்த இருசக்கர வாகன விற்பனை மாா்ச்சில் 3,30,133-ஆக இருந்தது. 2020 மாா்ச்சில் இருசக்கர வாகன விற்பனை 2,10,976-ஆக காணப்பட்டது.

ஒட்டுமொத்த வா்த்தக வாகன விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 31,599-லிருந்து 39,315-ஆக வளா்ச்சி கண்டது.

இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மாா்ச்சில் 1,70,897-ஆக இருந்தது. 2020 மாா்ச்சில் வாகன ஏற்றுமதி 1,26,034-ஆக காணப்பட்டது.

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21-ஆம் முழு நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 39,72,914-ஆக இருந்தது. எனினும் இது, 2019-20-ஆம் நிதியாண்டு விற்பனையான 46,15,212 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு விற்பனையும் 24,44,107 என்ற எண்ணிக்கையிலிருந்து 21 சதவீதம் சரிவடைந்து 19,18,667-வாகனங்களாக ஆனது பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.