3 நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த ஸியோமி

இந்தியா முழுவதும் கடந்த மூன்று நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.
3 நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த ஸியோமி
3 நாட்களில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த ஸியோமி

இந்தியா முழுவதும் கடந்த மூன்று நாட்களில்(அக்-2,3,4) 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

பண்டிகை கால சிறப்புத் தள்ளுபடியில் இணையதளங்கள் மூலமும் நேரடியாகவும் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது.

ஸியோமியின்  ரெட்மி , எம்ஐ பிராண்ட் ஸ்மார்ட்போன்களில்  புது வரவுகளான ஸியோமி 11 லைட் என்இ 5ஜி , எம்ஐ 11எக்ஸ் , ரெட்மி நோட் 10 எஸ் மற்றும் ரெட்மி நோட் 10 புரோ ஸ்மார்ட்போன்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. 

’தீபாவளி வித் எம்ஐ’ என்கிற பெயரில் வெளியான  ஸியோமி தயாரிப்புகள் எம்ஐ இணைய தளத்திலும் அமேசான் , பிளிப்கார்ட் தளங்களிலும் விற்கப்பட்ட சாதனங்களின் விற்பனை சதவீதம் கடந்த ஆண்டை விட 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.

மேலும் 1 லட்சம் ஸியோமி ஸ்மார்ட் டிவிகளும் விற்பனையானதால் 4கே டிவி சந்தையிலும் 53 மடங்கு வளர்ச்சி அடைந்து மற்ற போட்டி நிறுவனங்களால் ஸியோமி கவனிக்கப்பட்டிருக்கிறது.

இம்மாதம் முழுவதும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி இருப்பதால் வாடிக்கையாளர்கள் அமேசான் , பிளிப்கார்ட் தளத்தில் ஸியோமி சாதனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com