இந்தியாவில் புதிதாக 100 விற்பனையகங்கள் திறக்கப்படும் - ஸியோமி

தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்திருக்கும் ஸியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் 100 புதிய விற்பனையகங்களைத் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் புதிதாக 100 விற்பனையகங்கள் திறக்கப்படும் - ஸியோமி
இந்தியாவில் புதிதாக 100 விற்பனையகங்கள் திறக்கப்படும் - ஸியோமி

தொழில்நுட்பத்துறையில் தனக்கென தனி வாடிக்கையாளர்களைத் தக்கவைத்திருக்கும் ஸியோமி நிறுவனம் இந்தியாவில் மேலும் 100 புதிய விற்பனையகங்களைத் திறக்க இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இன்று (செப்-15) புதன்கிழமை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பின் , இந்தியாவின் பின் தங்கிய நகரங்களில் 100 புதிய விற்பனையகங்களை ஆரம்பித்து புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதே முக்கியம் என  ஸியோமி கருதுவதாக தெரிவித்தனர்.

மேலும் அந்நிறுவனத்தின் இந்திய செயல் அதிகாரி முரளி கிருஷ்ணன் ,’டைர் 5 மற்றும் 6-யைச் சேர்ந்த நகரங்களில் மேலும் 100 புதிய விற்பனையகங்கள் திறக்கப்பட உள்ளன. இவற்றில் ஸியோமியின் தயாரிப்புகள் கிடைக்கும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெங்களூருவில் தொடங்கப்பட்ட ஸியோமி  விற்பனையகங்களின் எண்ணிக்கை தற்போது 3000-க்கும் அதிகமாக இருக்கிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டதட்ட 6000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக ஸியோமி நிறுவனத்தின் ப்ராண்டான ‘எம்ஐ’ லோகோ இனி சந்தைக்கு வருகிற பொருள்களில் இடம் பெறாது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com