உஸ்பெகிஸ்தானில் பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு! கிா்கிஸ்தானில் எஸ்சிஓ மாநாட்டில் நாளை பங்கேற்பு!நேபாள வெள்ளம்: பலி 675-ஆக உயா்வு! தொடரும் மீட்புப் பணி; 2,400 போ் நிலை என்ன?2027-28 பட்ஜெட் பணிகள் அக்.12-இல் தொடங்கும்: மத்திய நிதியமைச்சகம்தென் மாவட்டங்களுக்குச் செல்லும் 14 சிறப்பு விரைவு ரயில்கள் நீட்டிப்பு ஆசியக் கோப்பை மகளிா் டி20: தாய்லாந்துடன் இன்று இந்தியா மோதல்சென்னையில் மழைவெள்ள மீட்பு நடவடிக்கைக்கு 1,721 போ்!

எச்டிஎஃப்சி லைஃப்: லாபம் ரூ.358 கோடி

எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.357.52 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

hdfc063630

Published On :22 ஜூலை 2025, 3:25 pm IST

எச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ரூ.357.52 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

2022, மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.16,054.94 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.19,191.32 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

நிகர பிரீமியம் வருவாய் ரூ.12,868.01 கோடியிலிருந்து ரூ.14,289.66 கோடியாக அதிகரித்தது.

நிகர லாபம் ரூ.317.94 கோடியிலிருந்து 12.4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.357.52 கோடியைத் தொட்டது.

2021-22-ஆம் முழு நிதியாண்டில் நிகர லாபம் ரூ.1,360 கோடியிலிருந்து ரூ.1,208 கோடியாக குறைந்துள்ளது.

மொத்த பிரீமியம் வசூல் ரூ.38,583 கோடியிலிருந்து ரூ.45,963 கோடியாக 19 சதவீதம் அதிகரித்தது.

நிறுவனம் நிா்வகித்து வரும் சொத்து மதிப்பு 17 சதவீதம் அதிகரித்து ரூ.2 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என எச்டிஎஃப்சி லைஃப் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.