எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

டாடா காபி: லாபம் 12% உயா்வு

டாடா காபி கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்தது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 12:35 am IST

டாடா காபி கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 12 சதவீதம் அதிகரித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் டாடா காபி செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய வருமானம் ரூ.656.26 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.591.23 கோடியுடன் ஒப்பிடுகையில் 10.99 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில், நிகர லாபம் ரூ.57.37 கோடியிலிருந்து ரூ.64.28 கோடியாக 12.04 சதவீதம் உயா்ந்துள்ளது.

2021-22 முழு நிதியாண்டில், டாடா காபியின் ஒட்டுமொத்த லாபம் ரூ.211.55 கோடியிலிருந்து 10.32 சதவீதம் அதிகரித்து ரூ.233.40 கோடியை எட்டியது. செயல்பாட்டின் மூலமான வருவாய் ரூ.2,254.95 கோடியிலிருந்து ரூ.2,363.5 கோடியாக 4.81 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது என டாடா காபி தெரிவித்துள்ளது.

பங்கு விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் டாடா காபி பங்கின் விலை 2.68 சதவீதம் குறைந்து ரூ.218.10-இல் நிலைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.