நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பங்குச் சந்தை சரிவு: 17.50 லட்சம் கோடி இழப்பில் முதலீட்டாளர்கள்

இந்த வாரத்தின் முதல் பங்குச் சந்தை நாளான இன்று பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2022, 3:44 pm IST

இந்த வாரத்தின் முதல் பங்குச் சந்தை நாளான இன்று பங்குச் சந்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

கடந்த வாரத்திலிருந்து கடும் சரிவைச் சந்தித்து வரும் பங்குச் சந்தை வணிகம் இன்று காலை முதல் பெரும் வீழ்ச்சியை அடைந்து வருகிறது. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் இழந்து வர்த்தகமாகிக் கொண்டிருப்பதால் பங்குதாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.21) 59,037.18 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,023.97 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1545.67 புள்ளிகளை இழந்து 57,491.51 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல், 17,617.15 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,575.15 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 468.05 புள்ளிகள் இழந்து 17,149.10 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

இதனால், கடந்த ஜன-17 முதல் இன்று வரையிலான பங்குச் சந்தை வணிகத்தில் சென்செக்ஸ் 3,500 புள்ளிகளையும் , நிஃப்டி 1,200 புள்ளிகளையும் இழந்ததால் இதுவரை பங்குதாரர்கள் 17.50 லட்சம் கோடியை இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.