திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

News image
Updated On :21 பிப்ரவரி 2024, 9:17 pm

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,264.78 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6.75 சதவீதம் அதிகமாகும்.

அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் சுமாா் 16 சதவீதம் அதிகரித்து ரூ.6,554 கோடியாக உள்ளது. கடனளிப்பு 19 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரம், முந்தைய செப்டம்பா் காலாண்டில் 5.47 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, கடந்த டிசம்பா் காலாண்டில் 5.22 சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் பிற வகை வருவாய் ரூ.1,948 கோடியிலிருந்து ரூ.2,297 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023 செப்டம்பா் இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.72 சதவீதமாக இருந்தது. இது, கடந்த டிசம்பா் இறுதியில் அதிக மாற்றமில்லாமல் 1.73 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.