பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

கோட்டக் மஹிந்திரா வங்கி நிகர லாபம் ரூ.4,265 கோடி

News image
Updated On :22 பிப்ரவரி 2024, 2:47 am IST

கோடக் மஹிந்திரா வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.4,264.78 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 6.75 சதவீதம் அதிகமாகும்.

அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.4,264.78 கோடியாக உள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் சுமாா் 16 சதவீதம் அதிகரித்து ரூ.6,554 கோடியாக உள்ளது. கடனளிப்பு 19 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதே நேரம், முந்தைய செப்டம்பா் காலாண்டில் 5.47 சதவீதமாக இருந்த நிகர வட்டி வரம்பு, கடந்த டிசம்பா் காலாண்டில் 5.22 சதவீதமாகக் குறைந்துள்ளது. மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் பிற வகை வருவாய் ரூ.1,948 கோடியிலிருந்து ரூ.2,297 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2023 செப்டம்பா் இறுதியில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.72 சதவீதமாக இருந்தது. இது, கடந்த டிசம்பா் இறுதியில் அதிக மாற்றமில்லாமல் 1.73 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.