இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் சரிவு

News image
Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

இந்திய மாநிலங்கள் இந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான "இக்ரா'வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் தொடர்ந்து 2 வாரங்களாக சரிவைக் கண்டு வந்தது.

இந்த நிலையில், மூன்றாவது வாரமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடன் பத்திர ஏலத்திலும் இந்த வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த ஜனவரி முழுவதும் மாநிலங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விதம் கடந்த 2 ஆண்டுகள் காணாத அதிகபட்சமாக 7.8 சதவீதம் என்ற நிலையிலேயே இருந்தது.

ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவிலேயே கடன் திரட்டுவதற்கும், நிதிப் பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 5.8 சதவீதமாக மற்றும் அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதற்குப் பிறகு மாநிலங்கள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை 7.44 சதவீதமாக இருந்த அந்த வட்டி விகிதம், முந்தைய வாரத்தைவிட 2 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். அப்போது வட்டி விகிதம் 7.46 சதவீதமாக இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 12 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.32,800 கோடியைத் திரட்டின. நடப்பு நிதியாண்டின் 4-ஆவது காலாண்டு ஏல நிகழ்ச்சி நிரலில் இந்த வாரத்துக்கான ஒட்டுமொத்த கடன் இலக்கு ரூ.45,200 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை திரட்டிய நிதி 27 சதவீதம் குறைவு.

கடந்த வார ஏலத்தில் மாநில கடன் பத்திரங்களின் சராசரி தவணைக் காலம் 13 ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகளாக அதிகரித்தது.

அத்துடன், மத்திய அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 41 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 37 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை கடன் பத்திரங்களை வெளியிட்டு மாநிலங்கள் ரூ.8.14 லட்சம் கோடி திரட்டியுள்ளன. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 31.5 சதவீதம் அதிகமாகும். அப்போது மாநிலங்கள் திரட்டிய நிதி ரூ.6.19 லட்சம் கோடியாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய மாநிலங்கள் இந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான "இக்ரா'வின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக மாநிலங்கள் வாரந்தோறும் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் தொடர்ந்து 2 வாரங்களாக சரிவைக் கண்டு வந்தது.

இந்த நிலையில், மூன்றாவது வாரமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடன் பத்திர ஏலத்திலும் இந்த வட்டி விகிதம் 7.44 சதவீதமாகக் குறைந்தது.

கடந்த ஜனவரி முழுவதும் மாநிலங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விதம் கடந்த 2 ஆண்டுகள் காணாத அதிகபட்சமாக 7.8 சதவீதம் என்ற நிலையிலேயே இருந்தது.

ஆனால், எதிர்பார்த்ததைவிட குறைந்த அளவிலேயே கடன் திரட்டுவதற்கும், நிதிப் பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 5.8 சதவீதமாக மற்றும் அடுத்த நிதியாண்டில் 5.1 சதவீதமாகக் கட்டுப்படுத்துவதற்கும் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டதற்குப் பிறகு மாநிலங்கள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

கடந்த செவ்வாய்க்கிழமை 7.44 சதவீதமாக இருந்த அந்த வட்டி விகிதம், முந்தைய வாரத்தைவிட 2 அடிப்படைப் புள்ளிகள் குறைவாகும். அப்போது வட்டி விகிதம் 7.46 சதவீதமாக இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 12 மாநிலங்கள் அரசுப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.32,800 கோடியைத் திரட்டின. நடப்பு நிதியாண்டின் 4-ஆவது காலாண்டு ஏல நிகழ்ச்சி நிரலில் இந்த வாரத்துக்கான ஒட்டுமொத்த கடன் இலக்கு ரூ.45,200 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் மாநிலங்கள் செவ்வாய்க்கிழமை திரட்டிய நிதி 27 சதவீதம் குறைவு.

கடந்த வார ஏலத்தில் மாநில கடன் பத்திரங்களின் சராசரி தவணைக் காலம் 13 ஆண்டுகளில் இருந்து 14 ஆண்டுகளாக அதிகரித்தது.

அத்துடன், மத்திய அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டு கால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 41 அடிப்படைப் புள்ளிகளிலிருந்து 37 அடிப்படைப் புள்ளிகளாகக் குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரை கடன் பத்திரங்களை வெளியிட்டு மாநிலங்கள் ரூ.8.14 லட்சம் கோடி திரட்டியுள்ளன. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 31.5 சதவீதம் அதிகமாகும். அப்போது மாநிலங்கள் திரட்டிய நிதி ரூ.6.19 லட்சம் கோடியாக இருந்தது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.