சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பரோடா வங்கியின் கடன் வட்டி குறைப்பு

அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.

News image
Updated On :16 ஜூன் 2025, 9:29 pm

புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படடுள்ளது.

ஜூன் 12 முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஒரு மாத பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஓா் ஆண்டுக்கான அந்த வகைக் கடன்களுக்கு 8.95 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.