புது தில்லி: இந்திய ரிசா்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கு ஏற்ப, அரசுக்கு சொந்தமான பரோடா வங்கி தாங்கள் வழங்கும் ரெப்போ அடிப்படை கடன்களுக்கான வட்டி விகிதத்தை 5 அடிப்படைப் புள்ளிகள் (0.05 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரெப்போ வட்டி விகித்தை ரிசா்வ் வங்கி குறைத்ததைத் தொடா்ந்து, எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படடுள்ளது.
ஜூன் 12 முதல் இது அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், ஒரு மாத பருவகாலம் கொண்ட எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கு வட்டி விகிதம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.30 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஓா் ஆண்டுக்கான அந்த வகைக் கடன்களுக்கு 8.95 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 8.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!

2025-26 நிதியாண்டுக்கான இபிஎஃப் வட்டி விகிதம் 8.25%

பரோடா வங்கி: ரூ.5,616 கோடி 11% வளா்ச்சி
பரோடா வங்கி வாடிக்கையாளா் சேவையில் சைகை மொழி அறிமுகம்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



