சென்னை கொடுங்கையூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொடுங்கையூர் எவரடி காலனி 10-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (67). இவர் கடந்த 27-ஆம் தேதி குடும்பத்துடன் கேரளத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாராம்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









