சட்டத்துக்குப் புறம்பாக மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி ஓட்டுநர் மீது கால்நடை துயர் துடைப்புக் கழகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது குறித்து கால்நடை துயர் துடைப்புக் கழக அதிகாரிகள் கூறியது: ஆரணியில் இருந்து சென்னைக்கு வந்த மினி லாரி ஒன்றில் அதிகப்படியான மாடுகளை ஏற்றி வந்ததை கழகத்தின் உறுப்பினர் ஒருவர் பார்த்து தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, லாரியை போரூர் அருகே துயர் துடைப்புக் கழக ஆய்வாளர்கள் தடுத்து நிறுத்தினர். 6 மாடுகளை மட்டுமே ஏற்ற வேண்டிய வாகனத்தில் 12 மாடுகளை ஏற்றியிருந்தனர். மேலும், தண்ணீர், உணவு, முதலுதவி வசதிகள் ஆகியவை லாரியில் இல்லை.
கால்நடை மருத்துவரிடம் சான்றிதழும் பெறவில்லை. இதனையடுத்து, 12 மாடுகளும் மீட்கப்பட்டு, வேப்பேரி கால்நடை துயர் துடைப்புக் கழக வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
லாரியின் ஓட்டுநர் ஆலப்பாக்கம் பழனிவேல் (32) என்பவர் மீது பிராணி வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!

ராகுல்காந்தி இன்று துறையூரில் பிரசாரம்

ரூ.69 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: இருவா் கைது

‘நோட்டா’வை வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதல் பொத்தானாக வைக்கக் கோரி மனு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

