கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

விதி மீறல்: திருவான்மியூரில் லேத் பட்டறைக்கு சீல்

திருவான்மியூரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த லேத் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

Updated On :2 ஜூன் 2013, 3:23 am IST

திருவான்மியூரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த லேத் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனர்.

இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அதிக சப்தத்துடன் அந்த பட்டறை செயல்பட்டதால், அதற்கு சீல் வைக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறியது: திருவான்மியூர், இந்திரா நகர், 14-வது சந்தில், குடியிருப்புப் பகுதியில் லேத் பட்டறை செயல்பட்டு வந்தது. இரவில் அதிக சப்தத்துடன் அந்தப் பட்டறை செயல்படுவதாக பல புகார்கள் வந்தன.

இதையடுத்து, அந்தப் பட்டறைக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 16 பட்டறைகளுக்கு அண்மையில் சீல் வைக்கப்பட்டது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.