சென்னை பாரிமுனையில் திருட்டு சி.டி.க்கள் தயாரித்த 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
இது குறித்து போலீஸார் வெளியிட்ட செய்தி:
சென்னை பாரிமுனை மலையபெருமாள் தெருவில் உள்ள ஒரு கடையில் போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர். அந்தக் கடையின் முகப்பில் வாழை இலைக் கடை இருந்தது. வெளியில் இருந்து பார்க்கும்போது அது வாழை இலைக் கடை போன்றுதான் தெரிந்தது.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் உள்ளே சென்று சோதனை செய்தபோது ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் புதிய படங்களின் திருட்டு சி.டி.க்கள் இருப்பதைப் போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, அந்த சி.டி.க்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சி.டி. தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினிகள், இயந்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சிவகுமார் (36), மாரிமுத்து, கார்த்திக் (31), சந்தோஷ் (29), தமீமுன் அன்சாரி (26), கட்டடத்தின் உரிமையாளர் தரணி (54) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சி.டி.க்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 லட்சம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எபோலா பரவல்! காங்கோவில் பலி எண்ணிக்கை 200-ஐ கடந்தது!

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

டி.கே. சிவகுமார் தலைமையில் அமோக வெற்றி.. கர்நாடகத்தின் 7 சட்டமேலவை இடங்களில் 5-ஐ கைப்பற்றிய காங்கிரஸ்!!

அமைதி ஒப்பந்தம்! சுவிட்சர்லாந்தில் நாளை அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நேரில் சந்திப்பு!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


