நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

ரூ.3 கோடி நிலம் மோசடி: பாமக கவுன்சிலர் கைது

சென்னை பூந்தமல்லியில் ரூ.3 கோடி நிலத்தை மோசடி செய்ததாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

Updated On :22 ஜூன் 2013, 4:12 am IST

சென்னை பூந்தமல்லியில் ரூ.3 கோடி நிலத்தை மோசடி செய்ததாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பூந்தமல்லி சுமித்ரா நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் ச.ராஜேந்திரன். இவரது மகள் ஷாலி என்ற தர்ஷினி. இவர் பெயரில், அவர் பாட்டி ராணியம்மாள் பூந்தமல்லியில் ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்தார்.

இந்நிலையில் ஷாலியின் உறவினர்கள் வெங்கடேசன், சீனிவாசன், நண்பர் மாதவன் ஆகியோர் அந்த நிலத்தை அபகரிக்கத் திட்டமிட்டனர். இதற்காக ராணியம்மாளைப் போல் வேறு ஒரு பெண்ணை நடிக்க வைத்து, ஏற்கனவே எழுதப்பட்டிருந்த பத்திரத்தை மாற்றி எழுதினர். மேலும் போலி ஆவணம் மூலம் அந்த நிலத்தை 3 பேரும், வேறு நபர்களுக்கு விற்கத் தொடங்கினர்.

இதையறிந்த ராஜேந்திரன், சென்னைப் பெருநகர காவல்துறையின் நில மோசடி தடுப்புப் பிரிவில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் வெங்கடேசன், சீனிவாசன், மாதவன் ஆகிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

வெங்கடேசன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வெங்கடேசன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகியாகவும், அந்தப் பகுதி கவுன்சிலராக உள்ளார்.

சென்னையில் சொத்து வாங்குபவர்கள் அசல் ஆவணங்களை சரிபார்த்தும், சொத்துகளை விற்கும் நபர்களை நன்கு தெரிந்து கொண்டும் வாங்குமாறு குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஆர்.எஸ்.நல்லசிவம் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.