சென்னையில் தொழிலபதிபரின் கார் மோதியதால் படுகாயமடைந்த சிறுமியின் மருத்துவச் செலவுக்காக மேலும் ரூ.92 ஆயிரம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி நள்ளிரவு அதிவேகமாகவும், தாறுமாறாகவும் ஓடிய ஒரு கார் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலை அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே விபத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தின் காரணமாக அங்கு சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த 3 சிறுவர்கள் படுகாயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பின்னர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் என்று கூறி எம்பீ குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஜி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி தமிழ்நாடு மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளைச் செயலாளர் எஸ்.ஜிம்ராஜ் மில்டன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த ஜூன் முதல் வாரம் விசாரணைக்கு வந்த போது, விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையொன்றில் சிகிóச்சை பெற்று வரும் சிறுமி சுபாரஷிதாவின் மருத்துவச் செலவை ஏற்க ஷாஜி தரப்பில் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிறுமியின் மருத்துவச் செலவுக்காக ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஷாஜி தரப்பு வழக்குரைஞர் கடந்த ஜூன் 5-ம் தேதி வழங்கினார்.
இந்நிலையில் சிறுமி தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அந்தத் தொடர் சிகிச்சைக்கான செலவுத் தொகையையும் தொழிலதிபர் ஷாஜி வழங்க நீதிமன்றம் உத்தரவிடக் கோரி மனுதாரர் மில்டன் தரப்பு வழக்குரைஞர் சங்கரசுப்பு உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் வியாழனன்று முறையிட்டார்.
இது தொடர்பாக விசாணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்காக தொழிலதிபர் ஷாஜி மேலும் ரூ.92 ஆயிரம் வழங்குமாறு உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இத்தாலி வரைக்கும் சென்ற லக்ஷ்மி அம்மாள், நரோடா ஆடியோ..! வைரலாகும் ஜுவென்டஸ் அணியின் ரீல்ஸ்!

விஜய் பிறந்த நாள் விழாவில்...

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரயில்வேயில் 6,565 டெக்னீசியன் பணிகள்!

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


