சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக 19 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் 19 இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாலையில் விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ராயபுரம் சூரிய நாராயணன் சாலை, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை, கீழ்ப்பாக்கம் லட்சுமிபதி சாலை, சுப்பிரமணி தெரு, வில்லிவாக்கம் சிவன் கோயில் மேற்கு மாட வீதி, ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி, நந்தனம் லோட்டஸ் காலனி, அசோக் நகர், அண்ணா பிரதான சாலை, கே.கே. நகர் பாரதிதாசன் காலனி, பி.டி. ராஜன் சாலை, கோடம்பாக்கம் அக்பராபாத் 2-வது தெரு, எம்.ஆர்.சி. நகர் வசந்த அவென்யு, ரோகிணி கார்டன், கோட்டூர்புரம் நாயுடு தெரு, 16-ஆவது அவென்யு இந்திரா நகர், திருவான்மியூர் தெற்கு அவென்யு, 4-வது சி வார்டு சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன.
அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் மரக்கிளை சாலையில் விழுந்தது. இவை அனைத்தும் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா?

திருநெல்வேலி மனோன்மணியம் பல்கலை.யில் சேர ஜூன் 12-ல் நுழைவுத் தேர்வு

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை!

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



