சென்னை சோழிங்கநல்லூரில், காகத்திடம் இருந்து கிளியைக் காப்பாற்ற முயன்ற இளைஞர் மின்சார வயர் மீது கைபட்டதால் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியது:
சோழிங்கநல்லூர் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் மகன் அருண்குமார் (18). இவர் 10ம் வகுப்பு படித்து விட்டு தந்தைக்கு உதவியாக சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அருண்குமார் ராஜீவ்காந்தி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது ஒரு காகம் கிளியை துரத்திச் சென்று கொத்தியதை பார்த்தாராம்.
காக்கையிடம் இருந்து தப்பிய கிளி அருகில் இருந்த மரத்தில் தஞ்சம் புகுந்தது. அங்கேயேயும் சென்ற காகம் கிளியை மீண்டும் கொத்தியது.
இதைக் கவனித்த அருண்குமார் கிளியை காப்பாற்றுவதற்காக மரத்தில் ஏறினார். அப்போது லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. மரத்தில் ஏறி காகத்தை விரட்டி கிளியைக் காப்பாற்ற முயன்ற அருண்குமாரின் கை அருகில் சென்ற மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் கீழே விழுந்து இறந்தார்.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

