ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

நான்கு நீதிபதிகள் பணி இடமாற்றம்

சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.இளங்கோ நீலகிரி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 8:27 pm

சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.இளங்கோ நீலகிரி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சி. திருமகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கமலாவதி தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.