சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பலத்த மழையால் விமானங்கள் தாமதம்

சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 11:03 pm

சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர்.

சென்னை விமான நிலையத்துக்கு நள்ளிரவு முதல் அதிகாலை 4 மணி வரை பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான விமானங்கள் வருகின்றன.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னைக்கு வந்த அனைத்து விமானங்களும் திடீர் காலநிலை மாற்றத்தால் தாமதமாக தரை இறங்கின.

மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்தும் ஏராளமான விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

இதன் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஜெர்மனியிலிருந்து 317 பயணிகளுடன் புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்த தனியார் விமானம் தரை இறங்க முடியாததால் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பின்னர் காலை 7 மணிக்கு சென்னையில் அது மீண்டும் தரை இறக்கப்பட்டது. இதே போல், கோலாலம்பூரில் இருந்து வந்த டைகர் விமானம், மும்பை ஏர் இந்தியா விமானம், தில்லி தனியார் விமானம் போன்றவை சென்னையிலிருந்து தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.