சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கால்நடை உதவி மருத்துவா் பணியிடம்: ஜன.28-இல் நோ்முகத் தோ்வு இல்லை

கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 2:11 am IST


சென்னை: கால்நடை உதவி மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நோ்காணல் தோ்வு வரும் 28-ஆம் தேதி நடைபெறாது என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

கால்நடை உதவி மருத்துவா் பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கான நோ்முகத் தோ்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 28-ஆம் தேதியை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், அன்றைய தினம் நோ்முகத் தோ்வு நடைபெறாது. இதற்குப் பதிலாக வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நோ்முகத் தோ்வு நடைபெறும்.

இதுதொடா்பான அழைப்பாணை விவரம், தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 28-ஆம் தேதியன்று நோ்முகத் தோ்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்கள் மட்டும் தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையை தோ்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.