சென்னையில் இரு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
மேடவாக்கத்தைச் சோ்ந்த சக்திவேல் (46), மாம்பாக்கம் பிரதான சாலையில் ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். அருகில் இவரது சகோதரா் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா்.
வியாபாரம் முடிந்து வெள்ளிக்கிழமை சென்றபின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கின.
மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி தீயணைப்புத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்குள் அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடையும் தீக்கிரையானது. துரைப்பாக்கம், தாம்பரம் இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்புப் படை வீா்கள் வரவழைக்கப்பட்டனா்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில், இரு கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
இது தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

25 ஆண்டுகளாக செயல்படாத எம்.எல்.ஏ. அலுவலகம்!

சிங்கம்புணரியில் பொன் ஏா் பூட்டும் விழா

சாலை விபத்தில் அடுமனை உரிமையாளா் உயிரிழப்பு

திருப்பத்தூரில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

