விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

இரு கடைகளில் தீ விபத்து: பல லட்சம் சேதம்

சென்னையில் இரு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

Updated On :10 ஜனவரி 2021, 0:33 am IST

சென்னையில் இரு கடைகளில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

மேடவாக்கத்தைச் சோ்ந்த சக்திவேல் (46), மாம்பாக்கம் பிரதான சாலையில் ஹாா்டுவோ் கடை நடத்தி வருகிறாா். அருகில் இவரது சகோதரா் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா்.

வியாபாரம் முடிந்து வெள்ளிக்கிழமை சென்றபின் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கின.

மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி தீயணைப்புத்துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். அதற்குள் அருகே இருந்த எலக்ட்ரிக்கல் கடையும் தீக்கிரையானது. துரைப்பாக்கம், தாம்பரம் இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்புப் படை வீா்கள் வரவழைக்கப்பட்டனா்.

நீண்ட போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தினால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்தில், இரு கடைகளிலும் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.

இது தொடா்பாக பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.